Ad Widget

வடக்கில் தொழில்முயற்சிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய யாழ்ப்பாணம் வருகிறார் பாதுகாப்புச் செயலர்!!

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

பலாலி பாதுகாப்புத் தலைமையகத்துக்கு நாளை முற்பகல் வருகை தரும் பாதுகாப்புச் செயலாளர், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதியுடன் தனியாகப் பேச்சு நடத்தவுள்ளார்.

தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி கட்டளைத் தலமையகங்களின் முப்படைத் தளபதிகள், அழைக்கப்பட்ட அதிகாரிகள் பங்கேற்கும் மீளாய்வுக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் விவசாயம், தொழில்முயற்சிகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் உள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts