Ad Widget

வடக்கில் தனியார் காணிகளை மீள வழங்க அரசு தீர்மானம்!

சர்வதேச தராதரத்துடனான உள்நாட்டு யுத்தக்குற்ற விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

rajitha sena

அது புதிய உள்நாட்டு விசாரணையாகக் காணப்படும். தேவைப்பட்டால் வெளிநாட்டு நிபுணர்களை அழைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரிடம் உள்ள தனியார் நிலங்களை ஒப்படைப்பதற்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் புதிய அரசு எண்ணியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனரத்ன கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Related Posts