Ad Widget

வங்கிகளில் கடன் பெற்றோர் தலைமறைவாகும் சம்பவங்கள் அதிகரிப்பு!

people-search-pic-findயாழ்.மாவட்டத்தில் கடன் தொல்லைகளால் தலைமறைவாகும் வங்கிக் கடனாளிகளைத் தேடி வங்கி அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரியவருகின்றது

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய செய்கைகளைக் காட்டியும், வீட்டுக் கடன், வாகன லீசிங் கடன் என அதிகளவான வங்கிக்கடன்களைத் தனியார் வங்கிகளிலும் அரச வங்கிகளிலும் பெற்றுக் கொண்டு, அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில் கடன்பட்டோர் தலைமறைவாகி வருகின்றனர். இவர்களைத் தேடி வங்கி உத்தியோகத்தர்கள் வீடுவிடாக செல்கின்றனர்.

குறிப்பாக கடந்த 2011ஆம் ஆண்டு விவசாயிகள் வங்கிகளில் சில கமக்கார அமைப்புக்களின் துணையுடன் தவறான தகவல்களை வழங்கி அதிக வங்கிக் கடன்களைப் பெற்று அவற்றைத் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்றுவரை குறித்த கடன்களை மீளச் செலுத்தாத நிலை காணப்படுகின்றது என வங்கியாளர்கள் குறிப்பிடுகின்றனர்

இந்நிலையில் கடன்களை வழங்கிய தனியார் வங்கிகள் மற்றும் அரச வங்கிகள் பல தடவைகள் கடனாளிகளுக்கு அறிவித்தல்களை வழங்கியபோதும் அவர்கள் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தாத நிலையில் வங்கி உத்தியோகத்தர்கள் தினமும் கடனாளிகளைத் தேடி வீடுவீடாகச் செல்கின்றனர்.

வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பி கட்டாத கடனாளிகள் சிலருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts