Ad Widget

ரோந்து நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணத்தின் சில முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மது பாவனையின் அளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக குற்றச்செயல்களில் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இந்த நிலையில் யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு யாழ் நீதவான் பொலிஸாரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் யாழில் இடம் பெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தின் சில முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts