வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை மற்றும் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) என்பன மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நகர எழுச்சி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேலணை பொதுச்சந்தை மற்றும் வடக்கின் வசந்தம் விசேட திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் உடற்பயிற்சி நிலையம் என்பன கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ளன.
உடற்பயிற்சி கூடங்களுக்கான உபகரணங்கள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன இதனையடுத்து இவை பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.