Ad Widget

ராஜித எம்.பி. கைது!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்ன, குற்ற விசாரணைப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 10ஆஆம் திகதி, ராஜித சேனாரத்ன ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக இரண்டு பேர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

அந்த விவகாரத்திலேயே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts