Ad Widget

ரயில் வந்தபோதும் மூடப்படாத புகையிரத கடவை

ரயில் வந்த போதும் புகையிரதக் கடவை மூடப்பட்டாது இருந்த சம்பவம் யாழ். மீசாலை ஜயா கடையடி புகையிரதக் கடவையில் செவ்வாய்க்கிழமை (06) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பு வீதியிலிருந்து ஏ – 9 வீதிக்கு நுழையும் மேற்படி புகையிரதக் கடவை ரயில் வந்த போதும், மூடப்படாமல் இருந்தது.

பொதுமக்கள் பயணம் செய்துகொண்டிருக்கையில் சற்று தூரத்தில் ரயில் வந்துகொண்டிருந்ததையடுத்து பொதுமக்கள் உஷாரடைந்தமையால் விபத்து தவிர்க்கப்பட்டது.

புகையிரத கடவையை மூடும் பணியாளர் அத்தருணத்தில் அங்கு இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. –

Related Posts