கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சனிக்கிழமை மாலை பயணித்த ரயிலில், யாழ். கோண்டாவில் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்ட 70 வயதான வயோதிபர் ரயிலில் மோதுண்டுஉயிரிழந்துள்ளார்.
அவ்வாறு பலியானவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்தனர்.