Ad Widget

ரணில் குற்றச்சாட்டு மகிந்த மறுப்பு!

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருந்தெருக்கள் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.

இந்தக் காலத்தில் வீதி அபிவிருத்திக்கென்று வங்கி ஒன்றில் இருந்து பெற்ற 55 பில்லியன் ரூபாயில் 28பில்லியன் ரூபாயை வேறு ஒரு அமைச்சுக்கு மாற்றியதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் குறித்த 28 பில்லியன் ரூபாய்கள், தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து குறுகிய கால கடனாக பெறப்பட்டது. அதுவே வீதி புனரமைப்பு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது

55 பில்லியன் ரூபாய்கள் நீண்டகால கடனாகவே வங்கியில் இருந்து பெறப்பட்டது. அது இன்னமும் அபிவிருத்திகளுக்காக பய ன்படுத்தப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை அரசாங்கம், தமது அரசியல் நகர்வை தடுக்கவே இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Posts