வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய நிலையில் இயற்கை எய்திய யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (04.12.2004) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது.
வடக்கு விவசாய அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். இதன் பதிவுகளைப் படங்களில் காணலாம்.