Ad Widget

யாழ்.வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடான உணவுகள்…!!

பாவனைக்கு உதவாத சுகாதார சீர்கேடான முறையில் விற்பனை செய்யப்பட்ட 500 இடியப்பங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அழிக்கப்பட்டுள்ளன.

வருடாந்த அடிப்படையில் குறித்த நிறுவனத்துக்கு சிற்றுண்டிச் சாலை நடத்துவதற்குரிய அனுமதி இரு வாரங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருந்தது.

இந்த வகையில் இளையான்கள் மொய்க்கும் வகையில் சுமார் 500 இடியப்பங்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டதையடுத்து குறித்த சிற்றுண்டிச் சாலை நடத்துநருக்கு அது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டதுடன், குறித்த இடியப்பங்களை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts