யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
சுமார் 130 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களை தரையிறக்க வசதியாக ஓடுபாதையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது போல பெரிய அகல-உடல் விமானங்களை ஏற்றிச் செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாது என்பதால் அது சாத்தியமில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தால் (BIA) பெருமளவு நிதியைப் பயன்படுத்தும் மத்தள விமான நிலையத்தைப் போலல்லாமல், யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு வினைதிறனாக மாற்ற உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக விமாப் போக்குவரத்து கட்டணத்தை மேலும் குறைப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.