Ad Widget

யாழ்.மேலதிக அரச அதிபர் இடமாற்றம் குறித்து ஆட்சேபனை தெரிவிப்பு!

rubini -varathalingamதிடீர் இடமாற்றத்தை எதிர்த்து யாழ்.மேலதிக அரச அதிபர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றத்தில் அரசியல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மோகன சரஸ்வதி ஆகியோருக்கு வட மாகாண சபைக்கு திடீர் இடமாற்றக் கடிதங்கள் நேற்றுக் கிடைத்தன.

இது தொடர்பாகவே இவர்கள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர்.

தமது அனுபவத்துக்கும், முதுநிலைத் தரத்துக்கும் ஏற்ற பதவி வடமாகாண சபையில் இல்லை என்றும், இதனாலேயே தமது ஆட்சேபனையைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்படி இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் இவர்கள் கோரியுள்ளனர்.

Related Posts