Ad Widget

யாழ். முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தீர்க்கப்படும் – ஹக்கீம்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (22) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், யாழ். மஸ்ஜித் முஹம்மதியா பள்ளிவாசலில் யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்களுடன் கலந்துரையாடினார்.

முஸ்லிம் மக்களின் குடிநீர் பிரச்சினை, வீட்டுத்திட்டம், அங்காடி வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

முஸலிம் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர், வீட்டுத்திட்ட பிரச்சினைகளும் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

இந்த கலந்துரையாடலில் பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.ஸி.முபின், சம்மேளனத்தலைவர் ஏ.எச்.ஜமால், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ்.சரபுல் அனாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts