Ad Widget

யாழ்.மாவட்ட பண்பாட்டு விழாவும் விருது வழங்கல் நிகழ்வும்!

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் , வடமாகாண பண்பாட்டலுவல்கள் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது

யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் இடப்பெற்ற இவ்விழாவில் , பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்,எம்.சமன் பந்துலசேனவும் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த விழாவில் , “யாழ்ப்பாணம்” எனும் நூல் வெளியீடும் , “இளங்கலைஞர்” விருது மற்றும் “யாழ் முத்து” விருது ஆகிய விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Related Posts