Ad Widget

யாழ் மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு!

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்திற்கான தேசிய நிகழ்வு நேற்று (04) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

jaffna-kachcherey-1

jaffna-kachcherey-2

jaffna-kachcherey-3

இதன்போது தேசியக்கொடியை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் ஏற்றிவைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இதேவேளை 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்ட சிறைச்சாலையிலிருந்து 3 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுகுற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறையில் உள்ளவர்களில் 3 கைதிகள் நேற்று யாழ் சிறையிலிருந்து சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேரா தலைமையில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Posts