Ad Widget

யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா!

விஜயதசமியை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (03) காலை 10 மணி பி.ப 2 மணி வரை முதல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது.

20141003_101542

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக்கழக தலைவர் திருமதி இ.மோகனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பூஜை வழிபாடுகளுடன் சிறுவர்களின் நடனங்கள், பாடல்கள் போன்ற கலாச்சார நிகழ்வுகளும், ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பட்டிமன்றம் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் அனைத்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

Related Posts