Ad Widget

யாழ். மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் மீள்குடியேற விண்ணப்பம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்காக இதுவரை உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்த 10 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர்வுக்காக பிரதேச செயலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் நாட்டின் தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் வசித்து வருவதாக அரச அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்தவர்களில் பலர் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் வலிகாமம் பிரசேத்தில் சில பகுதிகளில் இன்னும் மீள்குடியமர்வுக்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts