Ad Widget

யாழ். மாநகர சபை விவகாரம்: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

மக்களின் ஜனநாயக தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மாநகர சபை நீடிப்பதை விரும்புகிறேன் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

மாநகர சபை விவகாரம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க உள்ளீர்கள் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“மாநகர சபை முதல்வர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் சபை உறுப்பினர்களுடைய அபிப்பிராயங்களை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநருடைய செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

அறிக்கை கிடைத்ததும் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts