Ad Widget

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு எதிராக கல்வியங்காடு பொது சந்தை வியாபாரிகள் போராட்டம்!!

யாழ்.கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று கதவடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்.மாநகர சபை முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்தே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை சுகாதார ரீதியாக ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை, வரி அறவீட்டை இரண்டு மடங்காக மேற்கொள்கின்றமை, போன்ற செயற்பாடுகளைக் கண்டித்தும், மீன் சந்தைக்கான பாதையை பெரிதாக மாற்றித்தருவதாகவும் இன்னும் சில விடயங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை யாழ்.மாநகர சபை முதல்வர் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக புதிதாக சந்தைக் கட்டடம் அமைக்கும் பணி இடம்பெறுபோது வியாபாரிகள் முன்பு சந்தைக்கு அண்மையில் வெற்றுக்காணி ஒன்றில் தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts