Ad Widget

யாழ். மாநகர சபை உறுப்பினரை பதவி நீக்கக் கோரி வழக்கு தாக்கல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனின் யாழ்.மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வி.மணிவண்ணனின் முகவரியை தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக அறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related Posts