Ad Widget

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் நீடிப்பு

jaffna_municipalயாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவி காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையிலேயே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த யூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.

Related Posts