யாழ்.மாநகர சபையின் சுத்திகரிப்பு பணிக்கென ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாவில் இரண்டு புதிய கொம்பக்ற் லோடர்களை கொள்வனவு செய்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையின் சுத்திகரிப்பு பணிகளை துரிதப்படுத்தும் நோக்கத்துடனேயே இரண்டு புதிய கொம்பக்ற் லோடர்களை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த கொம்பக்ற் லோடர்களை மாநகர சபை பொது சுகாதார பரிசோகதர்களிடம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.