Ad Widget

யாழ். மத்திய பஸ் நிலைய நெருக்கடியை நீக்குவதற்கு நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நிலவும் நெருக்கடி நிலமைகளை நீக்குவதற்கும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

பஸ் நிலையத்திற்கு நேற்று (03) புதன்கிழமை விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன் துறைசார் அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடியிருந்தார் .

இதன் தொடர்ச்சியாக இரவு, தனது அலுவலகத்தில் துறைசார் அதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் நடத்திய கலந்துரையாடலில் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை யாழ். மாநகர ஆணையாளர் உடனடியாக மேற்கொள்ளும்படியும், பயணிகள் மற்றும் பயணிகள் பஸ்களுக்கும் எவ்வித இடையூறுகளுமற்ற வகையில் டவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் முகாமையாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

Related Posts