Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை இன்று ஆரம்பம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்படி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் மதியம் வெளியாகும் என்றும் மேலும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts