யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் விபத்து!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி எடுத்துச் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts