Ad Widget

யாழ் பல்கலையில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு அஞ்சலி!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

abuthul-kalam-jaffna-uni

யாழ் பல்கலை கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை பல்கலைகழக வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பல்கலை கழக மாணவர்கள் கலந்துகொண்டு மறைந்த பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவரின் உருவப்படத்திற்கு விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

Related Posts