Ad Widget

யாழ். நூலகத்திற்க்கு முன்பாக பதற்றம்

யாழ். நூலகத்திற்க்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகவும்
தமிழத்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷம் எழுப்புவதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, நூலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வாகனங்களை அங்கிருந்து நகரவிடாமல் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

police-libuaray-arppaddam

police-libuaray-arppaddam2

police-libuaray-arppaddam3

police-libuaray-arppaddam4

Related Posts