Ad Widget

யாழ் நீர்வேலியில் திருட்டுக் கும்பல் கைவரிசை

யாழ் நீர்வேலி தெற்கில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு ஒன்றிற்குள் புகுந்த 4 பேர் அடங்கிய திருட்டு கும்பல் ஒன்று தமது கைவரிசையை காட்டியுள்ளது.

வீட்டின் அடுப்பு புகட்டினால் உட்புகுந்து, வீட்டாரினை மிரட்டி அலுமாரியில் இருந்த கிட்டத்தட்ட 30 பவுண் நகைகள், 15 ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தடயவியல் SOCO பொலிஸார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் கைவிரல் அடையாளங்களும் எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts