Ad Widget

யாழ். நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏலவிற்பனை

யாழ். பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் வழக்கு இலக்கம் இனங்காணப்படாத துவிச்சக்கர வண்டிகளின் இவ்வருடத்துக்கான பகிரங்க ஏலவிற்பனை சனிக்கிழமை (27) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

court

நீதிமன்ற சுற்றுநிருபம் 5/2013இன் பிராந்திய மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைவாக பிராந்திய ரீதியாக அறிவித்தல் வெளியிட்டு பகிரங்க ஏலவிற்பனை செய்வதற்கு நீதிஅமைச்சு வழங்கிய அனுமதியின் பிரகாரமே இந்த ஏல விற்பனை நடைபெற்றது.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட 40 துவிச்சக்கர வண்டிகளும்; வழக்கு இலக்கம் இனங்காண முடியாத 15 துவிச்சக்கர வண்டிகளும் ஏலத்துக்கு விடப்பட்டன.

ஏல ஆரம்பவிலை 100 ரூபாயிலிருந்து 1,600 ரூபாய் வரை ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டது.

Related Posts