Ad Widget

யாழ், நீதிமன்ற தாக்குதல் மேலும் இருவர் விளக்கமறியலில்

யாழ். நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கைது செய்யப்பட்ட இருவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பெறப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இவ்விரு சந்தேகநபர்களையும் கைது செய்திருந்தனர்.

இவர்கள் இன்று யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.

இதேவேளை, யாழ், நீதிமன்ற தாக்குதல் தொடர்பான முக்கிய சந்தேகநபர்கள் 54 பேர் நாளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடக்கத்து.

Related Posts