யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைரவநாதன் என்ற சந்தேகநபர் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.