டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளது.
உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.
குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன்படி இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை – பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தபட்ட விமான சேவையானது மீண்டும் டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தின் மூலம் இலங்கை விமான சேவைகள் அதிகார சபைக்கு விண்ணப்பிக்கபட்ட விண்ணப்பத்தினை பரிசீலிக்கும் முகமாக குறித்த தகுதி காண் சேவை இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கை விமான சேவைகள் அதிகார சபை தலைமை அதிபதி கப்டன் தமிந்த றம்புக்வெல பிரதி பின்வருமாறு தனது கருத்தினை பதிவு செய்தார்-
குறிப்பாக இரண்டு வருடங்களின் பின்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்படுகிறது எமது நோக்கம் இலங்கைக்குள் உள்நாட்டு விமான சேவைகளை வளர்ப்பதாகும்.
அதன் அடிப்படையில் டேவிட் பிரிஸ் குடும்பத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று தகுதி கான் சேவை பரிசோதிக்கப்பட்டது.
இதற்கமைவாக அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளிலும் டேவிட் பிரிஸ் விமான சேவைகள் சித்தி பெற்றுள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான கட்டுமாணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.
டேவிட் பிரிஸ் விமான சேவைகள் நிறுவனம் தமது சேவைக்கான கோரிக்கையை விண்ணாப்பிக்கும் பட்சத்தில் நாங்கள் அதனை அனுமதிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
இதேவேளை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தின் ஊடாகர எந்த ஒரு நாட்டிற்கும் இந்த விமான சேவையின் ஊடக பயணித்து தாங்கள் விரும்பிய சேவையின் மூலம் பயணிப்பதற்கு இந்த சேவை வலியுறுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த டேவிட் ஃபீரிஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானி இந்த சேவையினை வாராந்தம் மூன்று நாட்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இருவழி கட்டணமாக 68,000 ரூபாய் அறவிடப்படும். ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும் இதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும்.
வெகுவிரைவில் விமான சேவைகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கட்டுநாயக்கா வரை சேவையை விசாரிப்பதற்கு நாம் விண்ணப்பிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
பயண நேரமானது ஒரு வழிக்கு 1 மணத்தியாலம் 10 நிமிடம் தேவைபடும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.