Ad Widget

யாழ்- கொழும்பு பயணிகள் பேருந்துக்கள் சிக்கின!

போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியாருக்கு சொந்தமான ஐந்து அதிசொகுசுப் பேருந்துகளும் ஒரு அரை சொகுசுப் பேருந்தும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையில் போது குறித்த ஆறு பேருந்துக்கள் சிக்கியுள்ளதுடன் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னவின் ஆலோசனையின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது

குறித்து ஆறு பேருந்துக்களின் சாரதிகளுக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் வழக்குத்தாக்கல் செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts