யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர்.
இராணுவத்தின் 553 ஆவது படைப்பிரிவுக்கென கட்டைக்காட்டுப் பகுதியில் 700 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் படி இன்று திங்கட்கிழமை நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அந்தக் காணிகளை அளப்பதற்குச் சென்றிருந்தன.
எனினும், காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அங்கு கூடியதால் அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது. இதனையடுத்து அந்தப் பணியை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர் அதிகாரிகள்.