Ad Widget

யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவன பட்டதாரிகள், அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள் தமது நியமனங்கள் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ATI-meeting

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி சந்திப்பு நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்.உயர்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் தேசிய கணக்கியல், வர்த்தக, முகாமைத்துவ பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் அவர்களிடம் எடுத்து விளக்கினர்.

இதுவிடயம் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள், நாட்டின் ஏனைய உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களில் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்தவர்கள் நியமனங்களைப் பெற்றுக் கொண்ட போதிலும் யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களது நியமனங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) உடனிருந்தார்.

Related Posts