கடந்த மூன்று வருடங்களாக கண்டி இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிய ஏ.நடராஜா யாழ் இந்திய துணைத் தூதரககத்தின் கொன்சியுலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ் உப உயர்ஸ்தானிகராலயத்தில் பதவியேற்கவுள்ள அவர் கண்டியில் பணியை நிறைவு செய்ததன் பின்னர் கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம். காமினி செனவிரத்னவை சந்தித்து சேவை காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
இச்சந்திப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஆதிவாசிகளின் தலைவர் வன்னியலெத்தவும் தேவையின் நிமித்தம் கண்டி மாவட்ட செயலகத்திற்கு வருகைத் தந்திருந்தார். நடராஜாவிற்கு அவரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.