Ad Widget

யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைப்பு

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கிலேயே இந்த புதிய கட்டடத் தொகுதி வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த புதிய கட்டடத்தில் இனிவரும் காலத்தில் இலவச சேவையினை இயக்கவும், அதேபோல முன்னர் இலவச சேவை இடம்பெற்ற இடத்தில் கட்டண சேவையினை இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே உள்ளூர் மருந்துகளுக்கு அதிக வரவேற்பு காணப்படும் நிலையில், நோயாளர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்துக்கு 105 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஆயுர்வேத வைத்தியசாலையின் பல்வேறு சேவைகளுக்குமான புதிய பிரிவுகளும் நோயாளர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் வெந்நீரை பெற்றுக்கொள்ள ஏதுவாக வெந்நீர் சுத்திகரிப்பு இயந்திரமும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ‘ஆகார ஒளடதம்’ என்னும் பாரம்பரிய உணவு தொடர்பான இறுவட்டும் ‘சித்தமருந்து செய்முறை தொகுப்பு’ எனும் நூலின் இறுவட்டும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts