Ad Widget

யாழ்ப்பாண மாநகரசபையில் நிதி மோசடி!

யாழ்ப்பாண மாநகர சபையில் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண்ணொருவர் 17 இலட்சம் நிதிமோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையின் திட்டமிடல் கிளையின்கீழ் புதிய கட்டிட அனுமதி மற்றும் பல்வேறு அனுமதிகளிற்காக வழங்கப்படும் படிவங்கள் மற்றும் அறவீடுகளின்போதே குறித்த பண மோசடி இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி இடம்பெற்றமை தொடர்பாக கண்டறியப்பட்டதன்பின்னரே நிர்வாக ரீதியில் ஆராயப்பட்டு தற்போது பெறுமதி கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் உத்தியோகத்தருக்கெதிராக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மாநகர சபை ஆணையாளர் வாகீசன் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் கண்டறியப்பட்டு 3 தினங்களே ஆன நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக திணைக்கள ரீதியில் உரிய முறையில் சகல ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

Related Posts