Ad Widget

யாழ்ப்பாணம் விமான நிலையம் விரைவில் மீள திறக்கப்படும்!! – ஜெய்சங்கர்

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து செயற்பாடின்றி முடிங்கியுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் என அரச தரப்பு தெரிவித்துள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினரை இந்திய வௌிவிவகார அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசியபோது யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மீளத் திறப்பது மற்றும் வட,கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் தமது கரிசனைகளை வௌிப்படுத்தினர்.

குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இன்போது கருத்து வௌியிட்ட இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்வரும் 23 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமும் செயற்பபாட்டுக்கு வரும் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளதாக கூட்டிக்காட்டினார்.

அத்துடன், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இந்தியாவின் உதவி அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கோரப்பட்டது.

Related Posts