Ad Widget

யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய யாசகர்!!

யாழ்ப்பாணம் வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது.

இக்கட்டுமானப் பணிக்காக யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பணத்தை ஆலய நிர்வாகத்தினரிடம் நேற்றையதினம் (17) வழங்கியுள்ளார்.

Related Posts