Ad Widget

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 20 பேர் தெற்கில் கைது

arrest_1தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர்கள், உன்னெல்லையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்தே தங்கியிருந்து தொழிலுக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற யுத்தவெற்றி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில், ஏழுபேர் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தப்பியோடியவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Posts