பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கிலியன் தோப்பில் 31ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார்.
அன்றைய தினம் காலை மன்னாரிலும், மதியம் வவுனியாவிலும் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.