Ad Widget

யாழ்ப்பாணத்தில் மீண்டும் விஷேட அதிரடிப்படை சோதனை!!

சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் குடாநாட்டில் விஷேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வலம்வரும் விசேட அதிரடிப்படையினர் வீதிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் வீதிகளில் செல்லும் வாகனங்களையும் மக்களையும் வழிமறித்து கடுமையான சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையானது யுத்தகாலத்தில் விசேட அதிரடிப்படையினர் வீதிச் சோதனைகளை மேற்கொண்டு மக்களை அச்சத்தில் உறையவைத்தது போன்ற உணர்வை யாழ்ப்பாணத்து மக்கள் மீளவும் உணரும் நிலை தற்போது உருவாகியுள்ளதாக பலரும் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

Related Posts