Ad Widget

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகத்திலே ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் நேற்று (வெள்ளிக்கிழமை)மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் எழுபத்தெட்டாயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அத்துடன் பொம்மைவெளி மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 38 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இவர்களை மேலதிக விசாரணையின்பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Posts