Ad Widget

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழப்பு!! நாட்டில் 94 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த (67 வயது) ஆண் ஒருவரும் புங்குடுதீவையை சேர்ந்த (71 வயது) பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

49 ஆண்களும் 45 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 வயதுக்கு குறைவான இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 821ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 21 ஆயிரத்து 429ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 86 ஆயிரத்து 365 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 30 ஆயிரத்து 243 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Posts