இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர்.
யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 33பாகை செல்சியஸும், பருத்தித்துறை, சாவகச்சேரியில் 33 பாகை செல்சியஸும் வெப்பத்தின் அளவு இருந்ததாக வளிமண்டலத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென நிலவிய வெப்ப சூழலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வடமராட்சிப்பகுதிக்கான மின்விநியோகமும் இன்று திடீரென தடைப்பட்டது.இந்த மின் தடையாலும், உஷ்ணக்காலநிலையாலும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.