அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய சிறப்பு நிகழ்வாக இந்து ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் நல்லூரில் ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறும்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் மாநாட்டின் நிறைவு நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்து கொள்கின்றனர்.
தருமபுர ஆதினம் குருமுதல்வர் சிறிமத் மௌன குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.