Ad Widget

யாழ்தேவியின் பெட்டிகள் கழன்று தனியாகப் பயணம்

train-yarl-thevyகொழும்பிலிருந்து பளை நோக்கிப் வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலிலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியாகச் சென்ற ரயில் பெட்டிகள் சுமார் 300 மீற்றர் தூரம் வரை பயணித்ததாகவும், மீண்டும் சென்ற ரயில் பிரிந்த பெட்டிகளை இணைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனப் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts