Ad Widget

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினர் உதவி!

யாழ் குடாநாட்டில் இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினர் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளனர்.

யாழ் மாவட்ட பாதுகாப்புப் படையின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸின் வழிகாட்டலின் கீழ் இந்த உதவி வேலைகள், நடமாடும் சேவைகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Army_Assists_Flood_Affected_Families_in_Jaffna

Army_Assists_Flood_Affected_Families_in_Jaffna1

Related Posts